web log free
April 27, 2024

போட்டியிலிருந்து கோத்தா விலகுவார்

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அடுத்தவாரம் விலகிக்கொள்வார் என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் தேசிய அடையாள அட்டைகள் இரண்டு உள்ளன. அவை தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார். 

குடியுரிமையில் மோசடிகளில் ஈடுபட்ட நபரொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதுதொடர்பிலான இடைக்கால தடையுத்தரவை, இன்று (30) பெற்றுக்கொள்வோம் என்றும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

 

Last modified on Monday, 30 September 2019 02:15