web log free
February 05, 2026

பம்பலப்பிட்டியில் கருக்கலைப்பு மாத்திரைகள் சிக்கின

சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த சமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள், கைப்பற்றப்பட்டுள்ளன. 

தேசிய கட்டுப்பாட்டு அதிகாரிகளினால், பம்பலப்பிட்டியிலுள்ள மருந்தகம் ஒன்றிலிருந்தே இவை, நேற்று (30) மாலை கைப்பற்றப்பட்டன. 

அந்த மருந்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையடுத்தே, அங்கு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளை கைப்பற்றியுள்ளன.

மருந்தகத்துக்கு உத்தியோகபூர்வ அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய மருந்துகள் மற்றும் குளிசைகள் அங்கு விற்பனைச் செய்யப்படும் அதேவேளை, சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளும் விற்பனைச் செய்யப்படுகின்றன. 

அந்த மருந்தகத்தில் மாத்திரை ஒன்று, 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd