web log free
May 05, 2024

செய்தித் துளிகளில் சில....


1. எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாவல, ரொசலின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2.திருகோணமலை தரஸ்கொட்டுவ பகுதியில் டிப்பர் வாகனமொன்று சிறுமி ஒருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் குறித்த 9 வயதுடைய டபிள்யு.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமி ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

3. யாழ். பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் நிறுத்தி விட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலுமொரு மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியது.

4. கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபட்ட அயல்வீட்டு இளைஞனுக்கு பொலிஸார் துணை நிற்பதால் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

5.சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

6.வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (30.09) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 3 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 01 October 2019 03:38