web log free
May 11, 2025

“பாராளுமன்றம் ஏப்ரல் கலைக்கப்படும்”

பாராளுமன்றம் இன்னும் ஆறு மாதங்களுக்குள் கலைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அப்படியாயின், எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, அதற்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். புதிய பாராளுமன்றமும் தெரிவு செய்யப்படும். 

 

பாராளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்றத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. மக்களும் அவை தொடர்பில் ஓரளவுக்கு தெளிவுப்படுத்தப்பட்டனர் என்றார். 

பாராளுமன்றத்தில் இடம்பெறும் சகல நடவடிக்கைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

Last modified on Tuesday, 01 October 2019 03:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd