web log free
October 16, 2025

மைத்திரி-பசில் பேச்சில் தீர்மானம் இல்லை

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பு, எவ்விதமான தீர்மானமும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.

ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இந்த பேச்சில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பொது சின்னம் தொடர்பில், பேச்சு நடத்தப்பட்டபோதும், எவ்விதமான தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd