web log free
May 07, 2024

த.தே.கூ தடுமாறுகிறது: இன்று முக்கிய சந்திப்பு

நிபந்தனை விதித்து, எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு வேட்பாளர்களும் எவ்விதமான உத்தரவாதங்களையும் இதுவரையிலும் வழங்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் சார்ப்பில் நிறுத்தப்பட்ட அதன் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க மட்டுமேயாகும்.

அவரிடம் இன்னும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. 

இதனால் பெரும் தடுமாற்றமடைந்துள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் முக்கிய தீர்மானமொன்று எட்டப்படுமென அறியமுடிகின்றது.

தங்களுடைய நிபந்தனைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்காவிடின், தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து இன்றைய சந்திப்பில் விரிவாக ஆராயப்படுமென அறியமுடிகின்றது.

அதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பு விசேட குழுவொன்று, இன்று (02) காலை வந்திறங்கியுள்ளது.

இக்குழுவுக்கும், சம்பந்தனுக்கும் இடையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னரே, இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது என அறியமுடிகின்றது. 

Last modified on Wednesday, 02 October 2019 01:32