web log free
May 10, 2025

மருதானையில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு

மருதானை சந்தியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதை அடுத்து அங்கு, ஆயுதமேந்திய பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுசரணை வழங்கும் வகையில்,  பாரிய பதாகைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சஜித்துக்கு ஆதரவான பதைகைகளில் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.வை. ராமின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு பாரிய பதாகைகளும், கிழிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, அங்கு ஒன்றுதிரண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அட்டகாசம் செய்தனர் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர், கிழிக்கப்பட்ட இடங்களை ஒட்டு நடவடிக்கைகளை ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Last modified on Monday, 07 October 2019 02:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd