web log free
May 04, 2024

கோத்தாவுக்கு எதிரான விசாரணையின் முக்கிய பகுதி

கோத்தாவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (02) இடம்பெற்ற, மனுக்கள் மீதான விசாரணையின் போது, முன்வைக்கப்பட்ட முக்கியமான வாதங்களின் சுருக்கம்.

மனுதாரர்:

அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர், எந்தவொரு சான்றிதழிலும் அமைச்சர்கள் கையொப்படமிடமுடியாது. அவ்வாறு இடப்படும் கையொப்பம் செல்லுபடியாகாது.

ஜனாதிபதிக்கு, அமைச்சர்களுக்கான அதிகாரம் இல்லை. அமைச்சரவையை நிறுவியதன் பின்னரே, ஜனாதிபதிக்கு அவர் வகிக்கும் அமைச்சருக்கான அதிகாரம் உள்ளது. ஆகையால், கோத்தாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சட்டரீதியற்றது.

முக்கிய பகுதிகள்

1.மஹிந்த ராஜபக்ஷ, 2015 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் பிரதமர்.

2.ஜனாதிபதியாக 2005 நவம்பர் 18 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

3.அமைச்சரவை கலைக்கப்பட்டது. அமைச்சுக்களின் செயலாளர்களின் பதவி வலிதற்றதாக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளும் முடங்கின.

4.கோத்தாவின் இரட்டை பிரஜைவுரிமை தொடர்பிலான சான்றிதழ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், 2005 நவம்பர் 21 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

5.புதிய அமைச்சரவை, 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் பதில் வாதம்

அமைச்சரவை விடுமுறையில் இருக்கும் போது, ஜனாதிபதி தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரமும் அரசியலமைப்பின் பிரகாரமும் செயற்படமுடியும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழை, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரே கைச்சாத்திடவேண்டும். எனினும், ஜனாதிபதியினால் கைச்சாத்திட்டதன் பின்னர், அந்த விண்ணப்பத்தை அந்த அமைச்சர் சமர்ப்பிக்கலாம் என்றார்.

வழக்கு விசாரணை இன்று (3) பிற்பகல் 1.30 வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Last modified on Friday, 04 October 2019 16:19