web log free
May 04, 2024

கட்டுப்பணம் செலுத்துகிறார் குமார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

அவர், கட்டுப்பணத்தை இன்று (3) செலுத்துவார் என அறியமுடிகின்றது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பகால உறுப்பினரான குமார் வெல்கம, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததன் பின்னர் பெரமுனவிலிருந்து வெளியேறினார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளரொருவரை நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Thursday, 03 October 2019 03:41