web log free
May 06, 2024

கோத்தபாய தொடர்பான தீர்ப்பு வெளியானது!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

கோத்தபாய இரட்டை பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டப்பூர்வமற்றது அல்லது போலியானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோத்தபாய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மனு மீதான விசாரணையின் முடிவில், மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதற்கமைவாய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

2019ஆம் ஆண்டில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

இதற்கான நிகழ்வினை சுகததாச உள்ளக அரங்கில் நடத்த மார்ச் 12 இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் ஐந்து முக்கிய விடயங்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கங்கள் கோரப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 29 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எனினும் இவர்கள் அனைவரையும் குறித்த மேடைக்கு நாம் கொண்டு வரவில்லை.

அதில் 11 பேரே நாளைய தினம் இடம்பெறும் நிகழ்விற்கு வருகின்றனர். சில நிபந்தனைகளின் அடிப்படையில் நாம் குறித்த 11 பேரை தெரிவு செய்துள்ளோம்.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களை கொண்டு வர தீர்மானித்திருந்தோம்.

ஆனால் மாற்று கருத்துடைய ஜனாதிபதி வேட்பாளர்களையும் அதாவது பிரதான கட்சிகள் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களையும் மேடைக்கு கொண்டு வருமாறு மக்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

எனவே நாம் 11 பேரை நாளைய தினம் மேடைக்கு கொண்டு வருகின்றோம். அதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ நாளைய தினம் நிகழ்விற்கு வருவது உறுதியாகியுள்ளது.

 

Last modified on Saturday, 05 October 2019 01:28