web log free
May 11, 2025

கதிரையை கைப்பற்ற மஹிந்த முயற்சி

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சினால், புதிதாக உருவாக்கப்படவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை கைப்பற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.

அந்த புதிய பெரமுனவின் தலைமையிலேயே எதிர்வரும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தலில்களின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, அந்த புதிய பெரமுனவின் தலைமையைக் கைப்பற்றுவதற்கு குறிவைத்து, மஹிந்த ராஜபக்ஷ காய் நகர்த்துகின்றார் என அறியமுடிகின்றது. 

Last modified on Thursday, 10 October 2019 03:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd