web log free
September 01, 2025

புலிகளுடன் தொடர்புடைய 7 பேர் மலேசியாவில் கைது

இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மலேசிய பொலிஸாரினால் ஏழுபேர், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்த ஏழுபேரில், அரசியில் ஈடுபடும் இருவரும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2014ஆம் ஆண்டு முதல், இன்று வரையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே, மலேசியாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு, மீளவும் உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் செய்திகள் வெளியானமை இது முதன்முறையல்ல.

என்றாலும், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மலேசிய பொலிஸின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd