web log free
May 02, 2024

‘சஜித்தின் அறிவிப்பால் ராஜபக்ஷர்கள் நடுங்குகின்றனர்’

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அறிவிப்பினால், ராஜபக்ஷர்கள் நடுங்குகின்றனர். அவர்களுக்கு சிறுநீர் போயிருக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற முதலாவது பிரசாரக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில்,  உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, காட்போட் வீரர்களுக்கு அல்லாமல் உண்மையாக, தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்து, இரவு பகல் பாராது, பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆவார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு நிறையவே அனுபவம் உண்டு. ஏசி அறைக்குள் இருந்துகொண்டல்ல. களத்திலிருந்து 30 வருடங்கள் போராடியவர். அவருக்கே, தனது ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்று சஜித் தனதுரையில் தெரிவித்தார்.

அதனை குறிப்பிட்டு காட்டிய அமைச்சர் ராஜித, “ ராஜபக்ஷர்களுக்கு எதிராக கடும் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சரத் பொன்சேகாவின் பெயரை கேட்டவுடன், ராஜபக்ஷர்களுக்கு சிறுநீர் போயிருக்கும் என்றார். 

Last modified on Wednesday, 16 October 2019 02:09