web log free
October 25, 2024

17 தங்க பிஸ்கட்டுகளுடன் உஷ்மா கைது

17 தங்க பிஸ்கட்டுகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு சோன்டஸ் வீதியைச் சேர்ந்த மொஹமது உஷ்மா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

33 வயதான அவர், டுபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு இன்று (13) காலை 7:15க்கு வந்த விமானத்திலேயே வந்துள்ளார்.

அவர், விமான நிலையத்துக்கு வங்கிக்கு முன்பாக நின்றிருந்த போதே, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தன்னுடைய டொலியில் கைப்பிடி மற்றும் முன் சில்லுகள் இரண்டுக்கு இடையில், நன்றாக டேப் சுற்றப்பட்டு, விமான நிலையத்திலிருந்து வெளியே கடத்துவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Sunday, 13 October 2019 15:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd