web log free
July 01, 2025

பிரசாரத்துக்கு “யுத்தம்”தடை

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு யுத்தவெற்றியை பயன்படுத்துவதற்கு முற்றுமுழுதாக தடைவிதிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யுத்த வெற்றி ஒருவருடையதோ, ஒரு கட்சியினருடையதோ அல்லது ஒரு பிரிவினருடையதோ அல்லது. அது இந்தநாட்டில் வசிக்கும் சகலருடைய வெற்றியாகும். ஆகையால், தனிப்பட்ட ரீதியில் யுத்த வெற்றியை பயன்படுத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd