web log free
September 08, 2024

35 பேரையும் மஹிந்த சந்திப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (22) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்டங்கள், வாக்களிப்புக்கு முன்னரும் பின்னரும் எவ்வாறு நடந்துகொள்வது, வாக்குச்சீட்டு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும். 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இந்த சந்திப்பு, நாளை காலை 10.30க்கு இடம்பெறும்.