web log free
May 03, 2024

திருமணமான இளம் பெண்கள் விற்பனை அம்பலம்

 திருமணமான அழகிய இளம் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 - 35 வயதுடைய களுத்துறை, ரனவல, மெதமுலன மற்றும் தொம்பே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு தினமும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் வருவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணமாக அழகிய பெண்களை இந்த செயற்பாட்டுக்காக குறித்த கும்பல் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை தெற்கு பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.