web log free
September 08, 2024

சு.கவை மீட்போர் சஜித்துடன் 31ஆம் திகதி இணைவர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அணியினர், எதிர்வரும் 31ஆம் திகதியன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். 

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம், எதிர்வரும் 31 ஆம் திகதியன்று கண்டியில் வைத்து வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இதில், முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், இணைந்துகொள்வார் என அறியமுடிகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதி மாநாயக்க தேரர்களுக்கே வழங்கப்படும் என, தோ்தல் கொள்கை பிரகடன வரைபுக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களின் விசித்திரக் கதைகளைப் போன்றில்லாமல்,  சொல்வதைச் செய்வோம், 2015ம் ஆண்டை விட அனேக முற்போக்கான, ஆக்கபூர்வமான மற்றும் நாட்டு இளைஞர்களது பெண்களது மற்றும் நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பில் அவதானத்துடன் பார்க்கும் தேர்தல் கொள்கைப் பிரகடணம் ஒன்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.

Last modified on Tuesday, 29 October 2019 02:17