web log free
September 03, 2025

நாடு திரும்பிய சந்திரிக்கா இரவிரவாக மந்திராலோசனை

இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, விடிய விடிய மந்திராலோசனை செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக, நேற்றிரவு 10.40 மணியளவில் சந்திரிக்கா, நாடு திரும்பினார். 

அதன்பின்னர், சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களின் ஒரு தொகுதியினர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில், கண்டியில் நாளை இடம்பெறும் கூட்டத்தில், சு.க அதிருப்தியாளர்கள் கலந்துகொள்வர் என அறியமுடிகின்றது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd