web log free
September 08, 2024

ஒற்றைக்காலில் நிற்கிறார் ரணில்

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றிப்பெற்று ஜனாதிபதியாகி விடுவார்.

அதற்குப் பின்னர் அவருடைய ஆட்சியிலும் நானே பிரதமராக பதவி வகிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி ஆனதும் அவருடைய ஆட்சியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.

Last modified on Wednesday, 30 October 2019 18:36