web log free
May 03, 2024

கோத்தாவின் மேடையை கைவிட, சு.க தீர்மானம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, உழைப்பதற்கு தீர்மானித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்கும், தேர்தல் பிரசார மேடைகளில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது, 

சுதந்திரக் கட்சியை இலக்குவைத்து, பொதுஜன பெரமுனவினர் தொடர்ச்சியாக “ஹு“ கோஷம் எழுப்புகின்றனர். ஆகையால், கோட்டாவின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது,

எனினும், கோத்தாவின் வெற்றிக்காக, மக்கள் கூட்டத்தை நடத்துவதற்கு சுதந்திரக் கட்சியினர் தீரமானித்துள்ளனர் என அறியமுடிகிறது.

ஆறு, ஆறு பேர் கொண்ட குழுவினரே, இந்த மக்கள் கூட்டத்தை நடத்துவதற் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது. 

 

Last modified on Monday, 18 November 2019 01:27