web log free
September 08, 2024

கோத்தாவின் கூட்டத்தில் தயாசிறி மாயம்

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அதரவு வழங்கி குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர தொகுதியில் இடம்பெற்ற பிரசாரக்
கூட்டத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர கலந்து கொள்ளவில்லை.

மொட்டுக் கட்சியின் பிரசார மேடைகளில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுகக்கு மிகவும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக “ஹூ” கோஷம் போடுவது தொடர்பில் எதிர்ப்பைக் காட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு மேடையில் ஏறவில்லை என அறியவருகின்றது.

எவ்வாறாயினும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகரவினால் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கு பற்றலுடன் வரும் 08ம் திகதி ஹெட்டிப்பொல நகரில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
மாவட்டத்தின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 06 November 2019 02:22