web log free
May 06, 2024

“தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிக்கும்”

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிப்பு நடக்கவுள்ளதாவும்,  இது குறித்து சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்து தனக்கு ட்விட்டர் செய்தி வந்ததாக இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன  தேர்தல் ஆணையம் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் இன்று (06) முறையிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கும் அதே ட்விட்டர் செய்தி வந்துள்ளதாகவும், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்தி அனுப்பி நபரை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைப்பு விடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தேர்தல் ஆணையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார். 

Last modified on Saturday, 09 November 2019 11:59