web log free
April 28, 2024

சந்திரிகா பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்றிருந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

மானவில்லுவ கச்சி பிரதேசத்தில் நேற்று (8) இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

அந்தக கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், அருவக்காடு குப்பை பிரிவு தொடர்பில் சந்திரிகாவிடம் கேள்விக்கேட்டனர் இதன்போதே, இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, இடம்பெற்ற கூட்டத்தில் சந்திரிகா, குமார் வெல்கம எம்.பி உள்ளிட்ட சுத்திரக் கட்சியைச் சேர்ந்தோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Monday, 11 November 2019 01:34