web log free
April 27, 2024

11 ஆம் திகதி 11.30க்கு வருமாறு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் எதிர்வரும் 11 ஆம் திகதியன்று காலை 11.30க்கு பாராளுமன்றத்துக்கு வருகைதருமாறு சபாநாயகர் கருஜயசூரிய சகலருக்கும் அறிவுறுத்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் 11 ஆம் திகதியன்று விசேட சபை அமர்வு நடத்தப்படவுள்ளது. 

 அறிவித்தலொன்றை விடுத்துள்ள சபாநாயகர், அன்றையதினம் சகலரையும் சமூகமளிக்குமாறு அறிவுறுத்தினார்.