web log free
May 05, 2024

நள்ளிரவு 12க்குப் பின் பிரசாரத்துக்குத் தடை

 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் யாவும், நாளை 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் அதற்குப் பின்னர்,

தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்தக் காலப்பகுதியில், பிரசாரங்களை முன்னெடுக்கும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலத்திரனியல்,

அச்சு ஊடகங்களுக்கு மட்டுமன்றி, சமூக ஊடகங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.