web log free
May 05, 2024

மஹிந்தவை எதிர்த்தவர் கைது

சிங்கள மொழியில் மட்டுமே இருக்கிறது தமிழ் மொழியிலும் இருக்கவேண்டும் என வலியுறுத்தி,யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தம்பிராசா  என்பவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் போது, கொழும்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்குப்பதிவை மேற்கொண்டவர்களின்  பெயர் விவரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் குதித்திருந்தார். அவர், தேர்தல்கள் ​ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினார்.

எனினும், உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுகலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய அங்கு விரைந்த யாழ்.பொலிஸார், அவரை கைதுசெய்துள்ளனர்.

Last modified on Monday, 18 November 2019 01:29