web log free
May 02, 2026

அமெரிக்க படையின் விமானங்கள் தரையிறங்கின


அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் சில, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் தரையிறங்கி, திரும்பிச் சென்றுள்ளன.

விமானப் பொருட்களை கைமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள், தரையிறங்கிச் சென்றுள்ளன என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.


இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd