web log free
April 28, 2024

மஹிந்தவின் அறிவிப்பால் ரணில் கலக்கம்

தனது பிறந்த நாளன்று கொழும்பு-5 நாரஹேன்பிட்டியிலுள்ள அபராம விஹாரைக்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன்பின்னர், 110 தாய்மார்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் செய்தனர்.

அதன்பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்து இலங்கை அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகவும், மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகவும் இருக்கமுடியாது. ஆகையால் பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்ததாகும்” என்றார்.

இதனால், இலங்கை அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.