web log free
September 07, 2025

நீக்கப்பட்டார் பௌசி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்ட ஏ.எச்.எம். பௌசி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திரக் கடசியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

அவருக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இன்று (22) அனுப்பிவைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு நல்கியமைக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையில், அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அதனையடுத்தே, அவரை கட்சியிலிருந்தே நீக்குவதற்கு மத்தியக் குழு தீர்மானித்துள்ளது. 

 

Last modified on Friday, 22 November 2019 04:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd