web log free
May 03, 2024

ரணிலின் பாதுகாப்பு குறைப்பு- சஜித்துக்கு அதிகரிப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு, அகற்றப்பட்டுள்ளது. 

அதேபோல, முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, திலக் மாரப்பன ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

எது எவ்வாறாக இருப்பினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு, அவரிடமிருந்து நீக்கப்படவில்லை. அந்தப் பாதுகாப்பு அவருக்கு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளது. 

Last modified on Saturday, 23 November 2019 10:24