web log free
May 04, 2024

2020 மே 2ஆம் திகதி பொதுத் தேர்தல் வாக்களிப்பு

பாராளுமன்ற கூடத்தொடரை, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி ஒத்திவைப்பார் எனில், அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு  2020 ஆம் ஆண்டு, மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும். 

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு, பாராளுமன்ற கூடத்தொடரை 4 அரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஒத்திவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தின் கூடத்தொடரின் நான்கரை ஆண்டுகள், 2020 மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Sunday, 24 November 2019 21:03