web log free
May 09, 2025

அழைத்தார் கரு: மறுத்தார் சஜித்

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய முயற்சிக்கின்றார். இன்று (26) முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி கைகூடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நாளையதினம் அழைப்பு விடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய முயற்சிகளை மேற்கொள்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம், எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு உள்ளிட்டவை தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரும் வகையிலேயே இவ்விருவரையும் சந்திக்க வைப்பதற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய முயற்சிகளை மேற்கொள்கிறார் என அறியமுடிகின்றது. தனதுக்கு சுகயீனம் என்பதனால், இன்றையதினம் தன்னால் வருகைதர முடியாது என, சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.

Last modified on Wednesday, 27 November 2019 16:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd