web log free
May 20, 2024

தாமதத்துக்கு சு.கவே பொறுப்பு


மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமடைவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே பொறுப்புகூறவேண்டும் என, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டுக்குள் தேர்தலொன்றை நடத்துவதற்கு, நான்கு முறைமைகளை ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், நாட்டு மக்களின் எண்ணங்களை சுரண்டி பார்ப்பதற்கு நிச்சயமாக, தேர்தலொன்றை நடத்தவேண்டும் என்றும் கூறினார்.

Last modified on Friday, 25 January 2019 02:50