web log free
May 03, 2024

ஆண் ஓரினசேர்க்கையால் எய்ட்ஸ் அதிகரிப்பு

உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. எனினும், கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது, எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை, இலங்கையில் அதிகரித்துள்ளது என காலி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பாலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். 

உலக எய்ட்ஸ் தினம், டிசெம்பர் 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனையொட்டி, தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் பலப்பி்ட்டிய வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே, வைத்திய நிபுணர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 
 
2018 ஆம் ஆண்டு உலகிலேயே எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்க்கை 37.9 மில்லியன் ஆகும். அதில், 23.3 மில்லியன் பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். 

வருடமொன்றுக்கு 1.7 மில்லியன் பேர், எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுகின்றனர். 

உலக அபிவிருத்தி நோக்கில், 2030 ஆம் ஆண்டு உலகிலிருந்தே எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலிருந்து 2025 ஆம் ஆண்டு முற்றாக ஒழிப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

எய்ஸ்ட் மரணத்தை குறைத்தல், புதிதாக எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்தல், பாதிக்கப்பட்டிப்போரை அதிலிருந்து மீட்டெடுக்கும் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகிய காரணங்களே பிரதானமானதாக உள்ளன. 
 
உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு, என்னாலும், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

2013 ஆம் ஆண்டு - 196 பேர் பாதிக்கப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டு-228 பேர் பாதிக்கப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு-235 பேர் பாதிக்கப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு-249 பேர் பாதிக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு-285 பேர் பாதிக்கப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டு-350 பேர் பாதிக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 393 ஆகும். 

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 1574 பேர், அரசாங்க வைத்தியசாலைகளில், 2018 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை பொருத்தவரையில், ஆணும், ஆணும் ஓரினசேர்க்கையில் ஈடுபடுவதனால், இவ்வாறான நோய்த்தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது.

அவ்வாறான நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அச்சமடைய தேவையில்லை. அரச வைத்தியசாலைக்கு சென்று இலவசமாக சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இலவசமாக மருதுகளும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Last modified on Friday, 29 November 2019 03:44