web log free
May 02, 2024

நான் மீண்டும் பிறப்பேன்- மைத்திரி

என்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்து விட்டமையால், சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். நான் முடிந்துவிட்டேன் என்று, அரசியலில் நான், மீண்டும் பிறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவையில் நேற்று தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதியின் சேவையை பாராட்டி, பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

என்னுடைய இறுதி மூச்சி இருக்கும் வரையிலும் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்வேன். அதனை யாராலும் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.