web log free
April 20, 2026

சுவிஸ் பணியாளர் பறக்கத் தடை

 கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டார் என்று கூறப்படும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பெண் ஊழியருக்கு, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு, இம்மாதம் 9ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், 9ஆம் திகதிக்கு முன்னர், சி.ஐ.டியினருக்கு வாக்குமூலத்தை அளிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Last modified on Thursday, 05 December 2019 01:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd