web log free
May 07, 2024

மகனுக்கு காற்சட்டை எடுத்துசென்ற தாய் கைது

மகனுக்கு அரைகாற்சட்ட எடுத்து சென்ற தாய் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மகனை பார்க்க சென்ற தாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அந்த நபர், பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்க்கசென்ற அவருடைய தாய், அரைகாற்சட்டையின் வாட்டியில், மிகவும் சூட்சுமமான முறையில், மறைத்துவைத்து ஹெரொய்னை எடுத்து சென்றுள்ளார். 

அந்த அரைகாற்சட்டையின் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அதனை பரிசோதித்த சிறைச்சாலை அதிகாரிகள், அதிலிருந்து ஹெரொய்னை மீட்டெடுத்தனர். அதனையடுத்தே, அந்த தாய் கைதுசெய்யப்பட்டார்.

 

சந்தேகநபரான அந்த தாயை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அவரை, காலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Last modified on Tuesday, 17 December 2019 02:56