web log free
February 02, 2026

‘பொய் சொல்கிறார் ரணில்’

ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என, பல ஆய்வுகளின் ஊடாக அம்பலமானது என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பது பொய்யாகும் என, அஜித் பி பெரேரா எம்.பி தெரிவித்துள்ளார்.

அந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் பிரதிநிதியாகவே நான் நியமிக்கப்பட்டிருந்தேன். ரணிலை விட எனக்கு நன்றாக தெரியும். ரணில் பொய் சொல்கிறார். சஜித்தின் வெற்றி உறுதியாகவே இருந்தது. எனினும், கால்கள் இழுக்கப்பட்டமையால், தோல்வியை தழுவவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd