web log free
April 26, 2024

மாலி தாக்குதலுக்கு ஐ.நா செயலாளர் கண்டனம்


மாலி இராச்சியத்தில், ஐ.நா அமைதிப்படையில் பணியாறிக்கொண்டிருந்த இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது, தாக்குதல் நடத்தியமைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில், இலங்கை படையினர் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். லங்கை அரசாங்கத்துக்கும் அவர், இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு பிரார்த்திப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.