web log free
May 09, 2025

அநுரகுமார இராஜினாமா

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டு, அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜே.வி.பியின் அரசியல் சபை, முதன் முறையாக கூடியது. அதில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பதவி விலகுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளார் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் 3 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகளை பெற்றமையால், அவருடைய கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Sunday, 22 December 2019 04:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd