web log free
October 14, 2025

கேப்பாபுலவில் கடும் பாதுகாப்பு


முல்லைத்தீவு, கேப்பாபுலவு குடியிருப்பாளர்கள், இராணுவ முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இராணுவ முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ முகாம் அமைந்துள்ள காணி, தங்களுடையது என்றும், அதனை உடனடியாக தங்களுகே மீளவும் திருப்பித்தருமாறு கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்று (26) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸார், வீதிதடுப்புகளை அமைத்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவ முகாமுக்குள் உள்நுழையாதவாறு தடுத்துள்ளனர். இதனால் அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd