web log free
May 01, 2024

5 நாள் சிறைசோறு: சம்பிக்கவுக்கு பிணை

கடந்த 18ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 5 நாட்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் வழங்கியது.

இராஜகிரிய பகுதியில், 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.