web log free
September 08, 2024

போடும் பாட​ல்களை கேட்குமாறு கட்டளை

 

ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஆகவும் கூடிய சத்தங்களில் பாடல்களை, பொதுபோக்குவரத்து வாகனங்களில், விசேடமாக பஸ்களில் ஒலிபரப்புவதற்கு போக்குவரத்து அமைச்சு தடைவிதித்துள்ளது.

இதேவேளை, தங்களால் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கப்படும் பாடல்களை மட்டுமே ஒலிபரப்புமாறும் பணித்துள்ளது.

அந்த பாடல்களை தவிர, ஏனைய பாடல்களையும் அதிகூடிய சத்தங்களுடன் ஒலிபரப்பினால், அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு  அறிவித்துள்ளது.