web log free
September 08, 2024

கோர விபத்தில் 4 விமானப் படையினர் பலி

விமானப் படையினரை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கர வண்டியும் கண்டெயினர் வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், விமானப்படையைச் சேர்ந்த நான்கு படையினர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம், வறக்காபொலையில் , இன்று (31) அதிகாலை 3.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை விமான முகாமில் இணைக்கப்பட்ட சேவையில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.  

அந்த விமானப்படையினர், பயணித்த முச்சக்கரவண்டியும் கண்டெயினர் வண்டியும் மோதியுள்ளது.

இந்த கண்டெயினர், கொழும்பிலிருந்து பொலன்னறுவையை நோக்கி பயணித்துகொண்டிருந்துள்ளது. 

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை எனினும், முச்சக்கரவண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து கண்டெயினர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அந்த முச்சக்கரவண்டியிலிருந்து மரண வீட்டில் கட்டுவதற்காக எடுத்துசெல்லப்பட்ட பெனரும் இருந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். 

Last modified on Wednesday, 01 January 2020 00:58