web log free
May 21, 2024

ரஞ்சனுக்கு பிணை: பிரயாணத் தடையும் விதிப்பு

கைத்துப்பாக்கியை சட்டவிரோதமா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எம் பி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நுகேகொட ,கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு சரீரப் பிணைகளிலும் 5 இலட்சம் ரூபா ரொக்கபிணையிலும் விடுவிக்கப்பட்டார்.  அவருக்கு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.