web log free
September 08, 2025

மாட்டினார் மைத்திரி- சி.ஐ.டி விசாரிக்கும்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்தே சி.ஐ.டி விசாரிக்க உள்ளது.  இது குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  அறியமுடிகின்றது.

அதேபோல் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் , மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd