web log free
May 09, 2025

மைத்திரி ஒகே- ரணில் பின்னடிப்பு: சி.ஐ.டி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில், அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் அதுதொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக நாளை அல்லது நாளை மறுதினம் அழைக்கப்படவிருக்கின்றார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் இதுபற்றித் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர்களான அஸாத் ஸாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா போன்றோரின் கருத்துக்களைப் பதிவுசெய்வதற்காக நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றின் முன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் அடைவுபற்றி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த தினம் ஒன்றை  இதுவரையில் ஒதுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd