web log free
September 08, 2024

“மஹிந்தவின் வீட்டிலேயே ராஜித மறைந்திருந்தார்”

கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடிவிராந்து வழங்கப்பட்டிருக்கும் போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் ஒளிந்திருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விழாவொன்றின் பின்னர் ஊடகச்சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் டொரிங்டன் உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித சேனாரத்னவை ஒளித்து வைத்திருந்ததாக, தனியார் வைத்தியசாலையில் ராஜித தன்னை அனுமதித்து கொள்வதற்கு முன்னர்  பலதரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.