web log free
May 04, 2024

மைத்திரி மகனின் வீடியோவும் அம்பலம்

ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினருக்கு முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடம்பெற்ற  அரசியல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாட்டாக்கள்  வெளியாகியுள்ளமை பெரும் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மகன்,  தன்னுடைய தந்தையின் அரசியில் அதிகாரத்தை எவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்பது தொடர்பிலான வீடியோவையும் அம்பலப்படுத்த போவதாக, ரஞ்சன் ராமநாயக்க திடீரென அறிவித்துள்ளார். 

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் மகனாள், தனக்கு நெருக்கமான, உதவியளித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உயர்பதிவிகளை வழங்கவேண்டுமென எவ்வாறு அழுத்தங்களை கொடுத்தார் என்பது தொடர்பிலான வீடியோ தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கும் ரஞ்சனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஹம் சிறிசேன, தன்னுடைய தந்தையின் அதிகாரத்தை எவ்வாறு முறைக்கேடாக பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவிகளை வாங்குவதற்கு வழிசமைத்தார் என்பது குறித்தும் சானி அபேசேகர தெரிவித்துள்ளார். 

Last modified on Tuesday, 14 January 2020 03:47